கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே முன் விரோதம் காரணமாக அதே பகுதியில் சேர்ந்த வாலிபரை வழிமறித்து தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் – காவல்துறையை சேர்ந்த நபர் என்பதால் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என
குற்றச்சாட்டு- குற்றம் செய்த காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த லட்சுமி (47) தனது மகனை தாக்கிய காவல் உதவி ஆய்வாளரும், மற்றொரு நபர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் மனு அளித்திருந்தார்.
அதில் கூறியிருந்ததாவது தனது மகன் சஞ்சய் (27) முட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி எனது மகன் வேலைக்கு செல்வதற்காக வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஜெகதீஷ் மற்றும் அவரது நண்பரான காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் வழிமறித்து தனது மகனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தனது மகனை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும். எதிர்மனுதாரர் காவல் துறையை சேர்ந்த நபர் என்பதால் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் எதிர் தரப்பிலிருந்து புகார் வாங்கி கைது செய்து விடுவதாக காவல்துறையினர் மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே எதிர்மனுதாரர் காவல் துறையை சேர்ந்த நபர் என்பதால் காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி. உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
