நீங்கள் மறதியில் அவதிப்படுகிறீர்களா? நீரிழிவு நோயால உங்கள் நினைவாற்றல் பாதிக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தருது !
உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்ட பிறகும், உரிய கவனம் செலுத்தாமல் இருக்கிறீர்களா? உங்களது நினைவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் ரத்த சர்க்கரையானது ரகசியமாக திருடிக்கொண்டிருக்கலாம் மருத்துவர்கள் எச்சரிக்கிறாங்க…
ரத்த சர்க்கரை அளவுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. சர்க்கரையை கட்டுப்படுத்தத் தவறிய நீரழிவு நோயாளிகளுக்கு ஞாபக மறதி, முடுவெடுக்க முடியாம போகர்து, கவனக்குறைவு, மனச்சஞ்சலம் அதிகமா இருப்பதா சொல்லப்படுது..
நீண்ட ஆயுளோடு இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மூளையின் ஆரோக்கியமும் முக்கியம். ரத்த சர்க்கரை எனும் அரக்கன நாம் கண்டுகொள்ளாம விட்டுட்ட, அது சத்தமே இல்லாமல் மூளைக்குள்ள போய், நாம் ஆயுள் முழுக்க சேர்த்து வெச்சிருந்த நினைவாற்றலையும், அறிவாற்றலையும் நாசமாக்கிரும் …
மூளையின் செயல்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் அப்படின்னா,
- ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வெச்சிருக்கனும்.
- மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளையும், உணவுத் திட்டத்தையும் தவறாமல் follow pannanum.
- மிக முக்கியமானது புகை, மதுப்பழக்கத்தைக் கைவிட்டு, போதிய உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தனும்ன்னு மருத்துவ நிபுனர்கள் சொல்றாங்க..