சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நூதனக் கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நூதனக் கண்டன ஆர்ப்பாட்டம்.
கை, கால்களில் ரத்தக்காயங்களுடன் கட்டுகள் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் இலங்கையில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் 17வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தந்தை பெரியார் திராவிட கழக மண்டல செயலாளர் பெரியார் செல்வம் தலைமையில் நடைபெற்றது.இனப்படுகொலைக்கானசர்வதேச விசாரணை அமைத்திட வேண்டும்,
தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை போன்று ரத்த காயங்களுடனும் கை கால்களில் கட்டுகள் அமைத்தும் சிறுவர் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பங்கேற்றது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததோடு,பரிதாபத்தை ஏற்படுத்தியது

Exit mobile version