ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியை இது தொடர்பாக முறையிட்ட பெற்றோரிடம் அலட்சியமாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவியின் தாய் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
திரும்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே காளிகாபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி என்பவரின் மகள் வர்ஷிகா (10) சிறுமி வர்ஷிகாவிற்கு தலையில் பிரச்சனை இருப்பதால் வர்ஷிகா சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாதனூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வர்ஷிகா ஐந்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த ஐந்தாம் தேதி வர்ஷிகா பள்ளிக்கு சென்றுள்ளார்.
அப்போது வகுப்பறையில் கல்வி கற்பது தொடர்பாக வர்ஷிக்காவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது அப்போது வகுப்பில் இருந்த ஜாய்பிரியா என்ற ஆசிரியையிடம் வர்ஷிகா சந்தேகம் கேட்டுள்ளார். அதற்கு ஆசிரியை ஜாய்பிரியா சந்தேகத்தை தீர்க்காமல் அவதூறாக பேசி தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்போது ஆசிரியை ஜாய்பிரியா தொலைபேசியில் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து வகுப்பறையில் மாணவர்களை ஆசிரியை ஜாய்பிரியா படிக்க சொல்லியுள்ளார் .அப்போது வர்ஷிகா சத்தமாக படித்ததால் மெதுவாக படிக்குமாறு கூரிய ஆசிரியை ஜாய்பிரியா அருகில் அமர்ந்திருந்த மாணவியை வைத்து வர்ஷிகாவின் தலையில் கொட்டியுள்ளார்.
அப்போது வர்ஷிகாவிற்கு தலையில் வீக்கம் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் பெற்றோர்கள் முறையிட்டபோது தலைமையாசிரியர் இதனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஏதாவது பணம்வாங்கி கொடுப்பதாகவும் அதனை வாங்கி கொண்டு இதனை இதோடு விடுமாறும் தலைமை ஆசிரியர் கூறியதாக கூறப்படுகிறது. அதனை மீறி புகார் அளித்தாலும் என்ன செய்ய முடியும்? வேறொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப் போறார்கள் என அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் ஸ்ரீமதி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்திற்கு வந்து தன் மகளை அவதூறாக பேசி அடித்த ஆசிரியை ஜாய்பிரியா மீதும் இது தொடர்பாக முறையிட்ட போது அலட்சியமாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்தார்.
மேலும் படிக்க பள்ளிக்கு வரும் மாணவி சந்தேகம் கேட்டதால் அவதூறாக பேசி அடித்து துன்புறுத்திய ஆசிரியர் மற்றும் இதனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி: ஸ்ரீமதி தாய்
