திருவாரூர் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து. மாற்று பேருந்துக்காக காத்து நின்ற நாகை நாடாளுமன்ற உறுப்பினர்..
திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகே அரசு பேருந்து திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் நடுவழியில் பழுதாகி நின்றது .
பேருந்தை சரி செய்ய பல மணி நேரம் ஆன நிலையில் பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டு சாலையின் ஓரம் நின்றனர்.
அவ்வழியாக சென்ற நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் தனது காரில் இருந்து இறங்கி சாலையில் நின்ற பயணிகளிடம் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார்.
திருவாரூர் அரசு பேருந்து பணிமனை மேலாளர்க்கு தொடர்பு கொண்ட எம்பி. செல்வராஜ் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதைக் கூறி உடனடியாக மாற்றுப் பேருந்து அனுப்ப கேட்டுக்கொண்டார்.
அந்த வழியே வந்த தனியார் பேருந்துகளில் சிலர் ஏறி சென்ற நிலையில் 10 இருக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து கிடைக்காமல் அங்கயே நின்று இருந்தனர்.
அவர்களை பேருந்து ஏற்றும் வரையில் சுமார் ஒரு மணி நேரம் சாலையில் காத்திருந்து அவ்வழியே வந்த மன்னார்குடி பேருந்தில் பயணிகளை பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றார்.
எம்பி செல்வராஜ் அவர்களின் இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
