மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப் பிரசவமாகி அழகான ஆண் குழந்தை பிறந்தது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மன்னை நகர் பாமணி சாலையில் உள்ள நரிகுறவர் காலணி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் என்பவரின் மனைவி சத்தியா (23. ) நிறைமாத கர்ப்பிணி. இந்நிலையில் சத்தியாவிற்கு நள்ளிரவில் திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து சத்தியாவை அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி மாவட்ட அரச மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ரயில்வே நிலையம் அருகில் அப்பெண்ணுக்கு திடீரென பிரசவலி ஏற்பட்டது. இதைக்கண்ட ஆம்புலன்ஸ் அவசர நுட்புணர் முரளி பிரசவம் பார்த்தார். இதில் சத்தியாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாய், சேய் இருவரையும் சிகிச்சைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைக்கண்ட உறவினர்கள் மற்றும் மருத்துவர்கள் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மதியழகன் மற்றும் அவசர மருத்துவ நுட்புனர் முரளி ஆகியோரை வெகுவாக பாராட்டினர்.













