என் சமுதாயத்துக்கு பட்டாவே தரல வாணியம்பாடி தாசில்தார் இங்க வந்தா தான் இங்கிருந்து எழுவோம் என மாற்றுத்திறனாளி வாலிபர் ஊர் பொதுமக்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் ஒரு வார காலத்திற்குள் பட்டா வழங்க உத்தரவு. பட்டா வழங்க மறுக்கும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து அதிரடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சொரக்காயால்நத்தம் பகுதியைச் சேர்ந்த ஆதிமருத்துவ சமூக மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர்.
அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி வாலிபர் மற்றும் ஊர் பொதுமக்கள் எங்க சமுதாய மக்களுக்கு பட்டா கொடுக்க மாட்டேங்கிறாங்க வாணியம்பாடி தாசில்தார் இங்கு வந்தாதான் இங்கிருந்து எழுவோம் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த மாற்றுத்திறனாளின் அலுவலர் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து தர்ணாவை கைவிடப்படும் கூறி அழைத்துச் சென்றார்.
அப்போது அந்த மனுவில் எங்க பகுதியில் ஆதி மருத்துவர் இனத்தைச் சார்ந்த மக்கள் சுமார் 64 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது.
அதேபோல வாணியம்பாடி வட்டாட்சியரும் கண்டிப்பாக உங்களுக்கு வீட்டு மனை கொடுத்து விடுவோம் எனவும் கூறினார்
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே தயவு கூர்ந்து எங்க சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு பட்ட கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் எனக் கூறி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஒரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பட்டா வழங்க வேண்டும் அவ்வாறு வழங்க தவிர்க்கும் அரசு அதிகாரிகளின் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என அதிரடி காட்டிய சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
