திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கூறிய வாசகத்தை எழுதி சட்டையை மனுவாக மாற்றி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கூறிய வாசகத்தை எழுதி மேல் சட்டையை மனுவாக மாற்றி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு ஊராட்சி ஜடையனூர் பகுதியை சேர்ந்தவர் ரஜினி மகன் அறிவு மணி.

மாற்றுத்திறனாளியான இவருக்கு அதே பெருமாபட்டு ஊராட்சி ஜடையனூர் பகுதியில் இவருக்கு சொந்தமாக இருந்த தனி பட்டாவில் உள்ள 34 செண்ட் அளவு உள்ள நிலத்தையும் கூட்டு பட்டாவில் உள்ள 60 சென்ட் நிலத்தையும் அளக்க 2023 ஆம் ஆண்டு முறையாக பணம் கட்டி கோரிக்கை வைத்த போது தன்னுடைய அனுபவத்தில் இருந்த 10 சென்ட் இடத்தை தனக்கே தெரியாமல் சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் வேறு ஒரு நபருக்கு பட்டா செய்து கொடுத்துவிட்டு அதற்கு பின்பு என்னுடைய நிலத்தை அளக்க வந்தார்கள்.

எனவே என்னிடமிருந்து பறிக்கப்பட்ட 10 சென்ட் இடத்தையும் மீட்டு முறையாக அனைத்து இடத்தையும் அளந்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நூதன முறையில் தன்னுடைய மேல் சட்டையில் மனு எழுதி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இவர் தன்னுடைய மேல் சட்டை பாக்கெட்டில் எழுதி வைத்திருந்த மனுவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல ஒரு மனிதனின் கனவு வாழ்க்கை எதிர்காலம் நியாயமாக ஒருவர் கூறுவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை என்று கூறி இருந்ததை குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version