திருவாரூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் 22 வயது  சங்கர் என்ற இளைஞர் அடித்துக்கொலை

திருவாரூர் அருகே கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் 22 வயது சங்கர் என்ற இளைஞர் அடித்துக் கொலை. காவல்துறையினர் விசாரணை.”

திருவாரூர் அருகே வண்டாம்பாளை பாளை பகுதியில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது..
இந்த நிலையில் திருவாரூர் அருகே எட்டியலூர் வடக்கு தெருவை சார்ந்த சங்கர், சரிதா ஆகியோருக்கு மகன் 22 வயதுடைய சந்தோஷ் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சங்கர் இறந்த நிலையில் சரிதா குடும்பத்துடன் எட்டியலூரில் வசித்து வருகிறார்.

சந்தோஷ் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் முடி வெட்டும் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு (10.05.26) திருவாரூர் அருகே உள்ள வண்டாம்பாளை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு அலகு காவடி எடுத்து வரும்போது ட்ரம் செட் அடித்து ஆடிவந்துள்ளனர். 

இந்த நிலையில் இரவு 10.30 மணி அளவில் வண்டாம்பாளை கீழத் தெருவை சேர்ந்த மோகன்தாஸ் மற்றும் இளைஞர்கள் ஆடி வந்த நிலையில்.. சந்தோஷுக்கும் அந்த இளைஞர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு சண்டை வந்துள்ளது.
இந்த நிலையில் கைகலப்பு ஏற்பட்டு சந்தோஷை மோகன்தாஸ் மற்றும் ஒருவரும் சேர்ந்து காலால் மிதித்ததாக கூறப்படுகிறது.. இதனால் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய சந்தோஷை தேவன் மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சந்தோஷை பரிசோதித்த மருத்துவர் சந்தோஷ் இறந்து வட்டதாக கூறியுள்ளார். சந்தோஷின் உடல் தற்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்குறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சந்தோஷின் தாய் சரிதா நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நன்னிலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version