தரங்கம்பாடி அருகே பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் உள்ள ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு. ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டதால் பக்தர்கள் உற்சாகமடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் உள்ள ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில்களில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கோவில் முன் யாகசாலை அமைத்து யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு நேற்று முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு பூர்ணாகுதி செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேல வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கும்ப கலசத்தை அடைந்தது கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். டிரோன் மூலம் புனித புனித நீர் தெளிக்கப்பட்டதால் பக்தர்கள் உற்சாகமடைந்தனர்.

















