திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயன்படாமல் இருக்கும் சிசிடிவி கேமராக்கள். கல்லாலும் கட்டைகளாலும் முட்டுக் கொடுக்கப்பட்டு செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் இன்றி ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் பொது மக்களின் வாகனங்களும் தொடர்ந்து திருட்டுப் போய் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தை சுற்றிலும் பல்வேறு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பாதுகாப்பு கருதி பல லட்ச ரூபாய் செலவில் பொருத்தப்பட்டன.
ஆனால் சில நாட்கள் மட்டுமே செயல்பட்ட சிசிடிவி கேமராக்களில் பல கேமராக்கள் செயலிழந்து போய் உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புற நுழைவாயில் பகுதியில் உணவக கட்டிடம் அருகே உள்ள சிசிடிவி கேமரா படுத்தப்பட்ட கம்பம் சாய்ந்து நிலையில் கல் மற்றும் கட்டைகளால் முட்டுக் கொடுக்கப்பட்டு பெயர் அளவிற்கு காணப்படுவது மட்டுமின்றி சாய்ந்த நிலையில் இருக்கும் கேமராக்கள் சாலையை நோக்கி இல்லாமல் தலையை பார்த்துக் கொண்டும் சுவற்றைப் பார்த்துக் கொண்டும் இருக்கும் அவல நிலையும் காணப்படுகிறது.
எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு மற்றும் இன்றி வாகனங்கள் திருட்டுப் போவதை தடுக்கவும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிப்பு செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.













