நாகை ரேஷன் கடையில் திடீர் ரெய்டு, ரேஷன் கடையிலிருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் மீது நாகை வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை
நாகப்பட்டினம் புதுத்தெருவில் அமைந்திருக்கும் ஒன்பதாம் நம்பர் அரசு நியாய விலை கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது, மேலும் இதில் அதிகம் உள்ளவர்கள் இஸ்லாமியர்கள்.
இந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் ஏராளமானோர் வெளிநாட்டில் உள்ள காரணத்தால் வீட்டில் தனியாக இருப்பவர்களும் வயது முதிர்ந்தவர்களும் ஏராளமானோர் இருக்கின்றனர், இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்தக் *கடை ஊழியரான ஃபகுமியா தாஜ் ரேஷன் பொருட்களான பல ஹோட்டல்களுக்கும் மளிகை கடைகளுக்கும் இந்த ஒன்பதாம் நம்பர் அரசு நியாய விலை கடையில் இருந்து அரிசி மூட்டைகளும், துவரம் பருப்பு, என்னை பாக்கெட்டுகளும், சீனி மற்றும் கோதுமை பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுதுந்தது.
வெளிநாட்டில் இருக்கும் ஆளில்லாத வீடுகளுக்கும், தனிமையில் வாங்க முடியாமல் இருக்கும் முதியவர்களுடைய கார்டுகளுக்கும், மண்ணெண்ணெய் வாங்காத குடும்ப அட்டைகளுக்கு எல்லாம் சேர்த்து, மண்ணெண்ணெய் வழங்காமலேயே அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக பில் போடப்படுகிறதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து *நாகப்பட்டினம் வட்ட வழங்க அலுவலர் நிஷா என்ற அதிகாரியிடம், ஆடியோ, வீடியோ, மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் எதிரொலியை ஒட்டி வட்ட வழங்கல் அலுவலர் உத்தரவின் பேரில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் ரேஷன் கடையில் ஆய்வு செய்து ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












