சுதந்திர தின உரையில் அரசியல் சாசனத்திற்கு எதிராகவே பிரதமர் பேசியிருக்கிறார். அங்கு கொடியேற்றிய பிறகு அவர், நக்ஸலைட்டுகளை ஒழித்து விட்டோம். ஆனால் நக்ஸல் சிந்தனை ( கம்யூனிஸ்ட் சிந்தனை ) வாழ்கிறது என பேசுவது தவறு என திருவாரூரில் சிபிஐ கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி
திருவாரூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கேசவராஜ் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற சிபிஐ கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது…
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்தது குறித்து கேள்விக்கு ..தமிழகத்தில், மக்கள் வாழ்வியலை பாதித்து ஒரு வளர்ச்சி திட்டம் அமைவது கூடாது. மக்களை, விவசாயத்தை பாதிக்காத இடங்களை தேர்வு செய்து விமான நிலையங்களை உருவாக்கலாம். மேகமலையில் தொன்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களை அப்புறபடுத்துவதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடில்லை. எனவே, அந்த மக்களை பாதுகாக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
சுதந்திர தின உரையில் அரசியல் சாசனத்திற்கு எதிராகவே பிரதமர் பேசியிருக்கிறார். அங்கு கொடியேற்றிய பிறகு அவர், நக்ஸலைட்டுகளை ஒழித்து விட்டோம். ஆனால் நக்ஸல் சிந்தனை ( கம்யூனிஸ்ட் சிந்தனை ) வாழ்கிறது என பேசுவது தவறு. நக்ஸல்கள் அவர்கள் பழங்குடியின மக்கள். பயங்கரவாதிகள் கிடையாது. அவர்களை கொன்று விட்டதை நாட்டின் பிரதமர் சாதனையாக பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. நக்ஸல்கள் ஆயுதங்களை தவிர்த்து ஜனநாயக பாதைக்கு வரவேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று இடதுசாரிகள் குறித்த கணக்கெடுப்பது குறித்து உள்துறை அமைச்சர், செயலாளர்கள், தமிழக முதல்வர் விளக்கமளிக்க வேண்டும். இதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. புதுடில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ள வழியின்றி ஒன்றிய அரசு ரயிலை முடக்கியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். மாநிலத்துக்கான நிதியை மத்திய அரசும் முழுமையாக வழங்க வேண்டும். சமூகத்திற்காக இயற்கையோடு போராடி உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும். நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும் கம்யூனிஸ்ட்கள் இல்லாத இந்தியா பற்றி கனவு காண்கின்றனர்.
கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் குறித்த கணக்கெடுப்புக்கு உத்தரவிட்ட சம்பவம் தொடர்பான கேள்விகளுக்கு…
தமிழ்நாட்டில், அதிகார வர்க்கங்கள் முதல்வரை மீறி செயல்பட்டிருந்தால் தலைமை செயலாளரும், முதல்வரும் கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் குளறுபடிகள் குறித்து திமுக வழக்கு போடப்பட்டது குறித்து கேட்டது கேள்விக்கு..
திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவறு நடந்திருந்தால் சட்டப்படி நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு..
.
வெண்மை புரட்சி நடைபெற்ற நம் நாட்டில், தேவைக்கு அதிகமாக பால் இருந்தும், அதற்கான உற்பத்தி விலை கிடைக்கவில்லை. தட்டுபாடு நிலவுகிறது. இவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
சட்டசபையில் கருத்தியலாக முரண்படலாம். ஆனால் வெறுப்பு அரசியலுக்கு அங்கு இடமில்லை. அவதூறு, கேலி, பழி சொல்வதற்காக அரங்கம் கிடையாது. அங்கு மக்கள் பிரச்சனை, கோரிக்கைகள் மட்டுமே பேசப்பட வேண்டும்.
வரும் காலத்தில் அதிமுக வில் தலைவர்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்கிற அமைச்சர் செங்கோட்டையன் கருது குறித்து அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.
தவெக ஆட்சியில் அமைச்சர்களாக ஆட்சிக்கும், பொது வாழ்விற்கும் முற்றிலும் புதியவர்கள் அதிகாரத்திற்கு வந்துள்ளனர். அதனால் அவர்கள் செயல்பாடு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.
அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் பயணிக்கலாம், ஜனவரி முதல் வீட்டுக்கு 3 சிலிண்டர் போன்ற தவெக அரசின் நல்ல திட்டங்களை வரவேற்கலாம். நாட்டில் ஏழ்மை ஒழியும் வரையில் நலத்திட்டங்கள், எளிய மக்களுக்கான சலுகைகள் தொடர வேண்டும்.
பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்கள் வரும்போது அது ஏழை, எளியவர்களின் வாழ்விடங்களை, விவசாய நிலங்களை பாதித்துவிட கூடாது. மக்கள் கருத்தறிந்து திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
விண்வெளியில் சென்று மருந்து தயாரிக்க உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். பிற நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைவதற்கு அவற்றை பிரதமரே துவக்கி வைத்துள்ளார். …













