கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் ( அமீர்) மறைவு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது
கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) ஷேக் ஹமத் பின் கலிஃபா அல்-தானி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவில் இன்று ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டு நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இன்று நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதேப்போல், ரயில் நிலையம் முன்பு உள்ள பிரம்மாண்டமான தேசியக்கொடி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேசியக்கொடி என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.













