திருவாரூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தொடங்கி வைத்தார் .
சர்வதேச போதைப் பொருள் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு திருவாரூர் ரயில் நிலையம் முன்பு திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழி ஏற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிரான வாக்கியங்கள் அடங்கிய பதககைளை ஏந்தி பேரணியாக புறப்பட்டு திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு பனகல் சாலை ,தெற்கு வீதி வழியாக வந்து திருவாரூர் வ,சோ, ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை வந்து அடைந்தது
மேலும் இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.













