பொள்ளாச்சி அருகே பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு
பொள்ளாச்சி அருகே சூலக்கல் கிராமத்தில் அமைந்துள்ள சூலக்கல் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்
சூலக்கல் மாரியம்மனை வேண்டினால் நினைத்த காரியம் கைகூடும் என்பதும்
தீராத நோய்களை அம்மன் தீர்த்து வைப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்
இக்கோயிலில் தேர்திருவிழா ஆண்டு தோறும் வைகாசி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடுவது வழக்கம் இந்த ஆண்டு கடந்த 11ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது மேலும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தினமும் மாரியம்மனுக்கு விரதம் இருந்து மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வந்தனர்.
முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது 50 அடி உயரம் உள்ள மர தேரில் சூழக்கல் மாரியம்மன் சிறப்பு அலங்காரம்
செய்யப்பட்டு
விநாயகர் தேரானது முன்னோக்கி செல்ல
மேள தாளங்கள் முழங்க ஓம் சக்தி பராசக்தி கோஷங்கள் எழுப்பியவாறு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்













