May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

13 ஆண்டுகளாகப் பூட்டிக்கிடந்த வீட்டின் மெத்தையில் எலும்புக்கூடாகக் கிடந்த மர்ம நபர்

by sowmiarajan
January 10, 2026
in News
A A
0
13 ஆண்டுகளாகப் பூட்டிக்கிடந்த வீட்டின் மெத்தையில் எலும்புக்கூடாகக் கிடந்த மர்ம நபர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் அருகே, பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி இருந்த ஒரு பாழடைந்த வீட்டில் இருந்து ஆண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி சக்திமலை செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த வீடு, முன்னாள் வங்கி ஊழியரான மேத்யூ என்பவருக்குச் சொந்தமானது. மேத்யூ மறைந்த பிறகு, அவரது குடும்பத்தினர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே கோவையில் குடியேறிவிட்டனர். இதனால், அந்த வீடு நீண்ட காலமாக ஆள் நடமாட்டமின்றி, பராமரிப்பின்றி பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மேத்யூவின் மகன் பிரசாந்த் தனது குடும்ப வீட்டைச் சீரமைக்கத் தீர்மானித்தார். இதற்காகத் தனது நண்பரும், கோத்தகிரியைச் சேர்ந்த மின் பணியாளருமான சசி என்பவரைத் தொடர்பு கொண்டு, வீட்டைச் சுத்தம் செய்து மின் இணைப்புகளைப் புதுப்பித்துத் தருமாறு கோரியிருந்தார். அதன்படி, நேற்று (ஜனவரி 9, 2026) சசி மற்றும் அவரது பணியாளர்கள் வீட்டைத் திறந்து உள்ளே சென்றபோது, அங்கு நிலவிய காட்சிகள் அவர்களை நிலைகுலையச் செய்தன. வீட்டின் படுக்கையறையில் உள்ள மெத்தையின் மீது, ஆண் ஒருவரது உடல் முழுவதுமாக அழுகி, வெறும் எலும்புக்கூடாகக் கிடப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகவலறிந்த கோத்தகிரி காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையிலான போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். வீட்டின் உரிமையாளர் முன்னிலையில் உடல் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அந்த வீடு நீண்ட நாட்களாகப் பூட்டிக்கிடந்ததைச் சாதகமாகப் பயன்படுத்தி, மதுப்பிரியர்கள் அல்லது சமூக விரோதிகள் யாரேனும் ஜன்னல் வழியாகவோ அல்லது கதவை உடைத்தோ உள்ளே நுழைந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எலும்புக்கூடாகக் கிடந்த நபர், அங்குத் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

உடல் முற்றிலும் சிதைந்து அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால், இறந்து கிடப்பவர் யார்? அவர் எப்போது இறந்தார்? என்பது போன்ற விபரங்களை அறிய ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து தடயவியல் மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே முதற்கட்ட உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாயமானவர்கள் குறித்த புகார்களைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த ராம்சந்த் சதுக்கம் அருகே, ஒரு வீட்டின் படுக்கையறையிலேயே 13 ஆண்டுகளாக யாரும் அறியாமல் ஒரு மனித உடல் எலும்புக்கூடாக மாறியிருப்பது அப்பகுதி மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Tags: case lockeddiscoveryhouseinvestigation skeletonmysterious
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் பணிக்கு நேர்காணல் பங்கேற்க அழைப்பு

Next Post

திருப்பரங்குன்றம் கலவரம் வெடித்ததால் 144 தடை உத்தரவு – நீதிபதி உத்தரவுக்கு எதிராகத் தமிழக மேல்முறையீடு

Related Posts

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
News

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்
News

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
Next Post
திருப்பரங்குன்றம் கலவரம் வெடித்ததால் 144 தடை உத்தரவு – நீதிபதி உத்தரவுக்கு எதிராகத் தமிழக மேல்முறையீடு

திருப்பரங்குன்றம் கலவரம் வெடித்ததால் 144 தடை உத்தரவு - நீதிபதி உத்தரவுக்கு எதிராகத் தமிழக மேல்முறையீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Recent News

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.