September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மணல் கொள்ளை கட்டுப்படுத்துவது கலெக்டர்களின் பொறுப்பு : சென்னை உயர் நீதிமன்றம்

by Priscilla
December 17, 2025
in News
A A
0
மணல் கொள்ளை கட்டுப்படுத்துவது கலெக்டர்களின் பொறுப்பு : சென்னை உயர் நீதிமன்றம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
மணல் மற்றும் கனிம வளக் கொள்ளை, பணமும் அரசியல் ஆதாரமும் கொண்டு மாபியா போன்று நடைபெறுவதாக கடுமையாக சாடிய சென்னை உயர் நீதிமன்றம், இத்தகைய சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் நேரடி பொறுப்பு எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக் கொள்ளை தொடர்பான வழக்கில், புவியியல் மற்றும் கனிம வளத் துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முன்பே உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, புவியியல் மற்றும் கனிம வளத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மணல் மற்றும் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தாண்டு மார்ச் 31க்குள் இந்தப் பணிகள் நிறைவு பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2020 முதல் 2025 நவம்பர் வரை 1,439 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டது கண்டறியப்பட்டு, 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், பதிவான வழக்குகளில் எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் ஏன் அறிக்கையில் இடம்பெறவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும், ரூ.5 கோடி மதிப்பிலான கனிம வள கொள்ளை நடந்த வழக்கில் ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பதால் என்ன பயன் கிடைக்கும் எனவும் விமர்சனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அரசியல் மற்றும் பண பலத்தின் துணையுடன் மணல் மற்றும் கனிம வளக் கொள்ளைக் கும்பல்கள் மாபியா போல் செயல்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இத்தகைய கொள்ளைகளை தடுக்க அதிகாரிகள் நேரடி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர். மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையை தடுப்பது மாவட்ட கலெக்டர்களின் பிரதான பொறுப்பு என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

மேலும், இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்க தவறிய வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மணல் மற்றும் கனிம வள கொள்ளை குறித்து புகார் அளிக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும் என்றும், கொள்ளையை தடுக்கும் வகையில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிமன்றம் முடித்து வைத்தது.

Tags: chennai high courtCOLLECTORShigh courtINCHARGESAND MINING
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : கேள்விகளுக்கு மத்தியில் அமர்வை விட்டு வெளியேறிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Next Post

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.