மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வருகை புரிந்தனர்.தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, தையல்நாயகி அம்பாள், சட்டநாதர் சுவாமி, தோணியப்பர், ஆகிய சுவாமி சன்னதியில் அமைச்சர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் சாமி பிரசாதங்கள் சுவாமி படங்களை வழங்கினர். அப்போது கோயிலில் இருந்த பக்தர்கள் அமைச்சர் கே.என்.நேருவிடம் சீர்காழி முத்தநாதர் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் வெளி மாவட்ட மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கழிப்பிட வசதி இல்லாமல் பெரும் மின்னலுக்கு உள்ளாகி வருகின்றனர் என கோரிக்கை விடுத்தனர். மேலும் நகரில் பல இடங்களில் குப்பைகள் வாரக்கணக்கில் தேங்கி கிடந்த சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர் இதனை கேட்டுக் கொண்ட அமைச்சர் உடனடியாக நகராட்சி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கழிப்பிட வசதி ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும் குப்பைகள் நாள்தோறும் முறையாக அகற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் அன்பழகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல நிர்வாகி ஸ்ரீதர், நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் மஞ்சுளா, நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.பின்னர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட, நகர நிர்வாகிகள் அமைச்சர் கே. என். நேருவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து
















