மதுரையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
தவெக 2வது மாநில மாநாட்டில் பிற்பகல் 4.50 மணிக்கு தனது உரையை தொடங்கிய விஜய் பிற்பகல் 5.25 மணிக்கு முடித்து, 35 நிமிடங்கள் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எங்களுக்கு தேவையானதை செய்யாமல் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ளீர்கள் பாஜகவின் மோடி அவர்களே.
மக்கள் சக்தியே இல்லாத கட்சிகளை மிரட்டி 2029 வரை சொகுசுபயணம் மேற்கொள்ள நினைக்கிறீர்களா?
நேரடி, மறைமுகம் என கூட்டணி போட்டாலும் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்?
தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல் ஓரவஞ்சனை செய்யும் பாஜக ஒன்றிய அரசு.
இவ்வாறு அவர் கூறினார்