கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ,அரசை கண்டித்து 6அம்ச கோரிக்கை

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ,
தமிழக அரசை கண்டித்து 6அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகத்தில் பணி புரியும், தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சார்பில், கருப்பு பேட்ச அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரு நபர் குழு பரிந்துரையின்படி ஆறாவது ஊதிய குழுவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், பொறியாளர்களுக்கு ஏழாவது ஊதிய குழு வழங்கிட 2024 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும், பொறியாளர்களின் பதவி உயர்வு குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் காலம் வரை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை ஆகியவற்றில் பணிபுரியும் பொறியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அப்பொழுது அவர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்

Exit mobile version