திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் 48-வது தொடக்க விழா பொது கூட்டம் நடைபெற்றது.
இதில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,BV, ரமணா, பெஞ்சமின், அப்துல் ரஹீம், ஆகியோருக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர்
இந்நிகழ்ச்சியில் பேசிய
புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி,
தெரிவிக்கையில்,
அம்பேத்கர் மன்றமாக தொடங்கிய புரட்சி பாரதம் கட்சியானது தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கி கொண்டிருக்கிறது எனவும்,
வீட்டில் முடங்கி இருந்த என்னை கட்சியை வழி நடத்த வேண்டும் என அன்பு கட்டளையிட்டதின் பேரில் லட்சக்கணக்கான தொண்டர்களுக்காக அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சிப் பயணத்தை ஏற்று கொண்டேன் என்றும்,
ஒவ்வொரு தொண்டர்களும் ஒவ்வொரு மூர்த்தியாராக பார்க்கிறேன் எனவும்,
தற்போது இருக்கின்ற திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த தேர்தல் தான் மூடுவிழா எனவும்,
ஒரு ஜெகன் மூர்த்தியை முடக்கினாலும் பல்லாயிரம் ஜெகன் மூர்த்தியார் தோன்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும்
திமுகவில் இருக்கும் தலீத் மக்கள் திமுகவுக்கு பட்டை நாமம் போடுவர் எனவும்,
எந்த துறை எடுத்தாலும் அதில் பணிபுரிய அதிகாரிகள் திமுக அரசு மீது வெறுப்பில் உள்ளதாகவும்,
மேலும்
அதனை தொடர்ந்து பேசியவர்
திமுக அரசனது மகளிர் உரிமை தொகை வழங்குவதற்காக தலித் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 1540 கோடி ரூபாய், நிதியிலிருந்து எடுத்து கொடுத்துள்ளதாகவும்,
இந்த தேர்தல் தான் திமுகவுக்கு மூடுவிழா எனவும்,
ஒரு ஜெகன் மூர்த்தியை முடக்கினாலும் பல்லாயிரம் மூர்த்தியார் தோன்றுவார்கள் என்றும்,
திரூவள்ளூரில் நடந்த போராட்டத்தில் மூர்த்தியார், A1, ஜெகன் மூர்த்தியார், A2 குற்றவாளிகள், என்று இதுவரை வழக்கு நடந்து கொண்டிருக்கிறது எனவும்,
மக்களுக்காக போராட்டம் செய்த தங்களுக்கு இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பதாக 650 பேர் கைது செய்யப்பட்டதாகவும்,
தவறான வழியில் நான் சிறைக்கு சென்றதில்லை, என்றும் இந்த திமுக அரசு என் மீது வன்மம் கொண்டிருக்கிறது, என்றும்,
புரடசி பாரதத்தை பார்த்து தான் திமுக மகளிர் மாநாட்டை நடத்தியது எனவும்,
வருகிற தேர்தலில் மக்கள் திராவிடர் மாடல் அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறதை யாராலும் மாற்ற முடியாது என
அவர் தெரிவித்தார்.

















