வியட்நாம்: மத்திய வியட்நாமில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் 41 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காணாமல் போனுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் மத்திய வியட்நாமின் பல மாவட்டங்களை பாதித்துள்ளது. சுமார் 52,000 வீடுகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் 62,000 பேருக்கு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர்.
பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மழை 150 செ.மீட்டரை தாண்டியுள்ளது. நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, மின்சார சேவையும் துண்டிக்கபட்டுள்ளது. மீட்பு மற்றும் உதவி பணிகள் முழு வேகத்திலும் நடைபெற்று வருகிறது.
வியட்நாம் வானிலை ஆய்வு மையம் இதை நாட்டில் பதிவான மிகப்பெரிய மழைப்பொழிவாக அறிவித்துள்ளது.

















