நாய் குறுக்கே வந்து மோதியதால் 4 வயது சிறுமி பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சாலையில் நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில், 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் தனது மகள் அனாமிகா (4) உடன் பைக்கில் ஆரணி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அந்த நேரத்தில், சாலையில் திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்து மோதியதால், பைக் விபத்துக்குள்ளானது.

இதில் தந்தை மகள் இருவரும் கீழே விழுந்தனர். அருகிலிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், தலையில் கடுமையான காயம் அடைந்த அனாமிகா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version