மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் 3-ஆம் நாள் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் 3-ஆம் நாள் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் திருக்கடையூர் திருவிளையாடல் மார்க்கண்டேயர் புராணம், மற்றும் மயிலாடுதுறை சுற்றியுள்ள சிவஸ்தலங்களின் வரலாறுகளை தொகுத்து சிவ நவ பக்தி என்னும் நாட்டிய நாடகம் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு உடைய அலங்காரத்துடன் பரத கலைஞர்கள் கண்முன்னே காட்சி படுத்தியும் பல்வேறு பரத நிகழ்வுகளை நிகழ்த்தி சிவனுக்கு சமர்ப்பணம் செய்தனர்:-

மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா மயில் வடிவில் அம்மன் சிவனை பூஜித்த ஆலயமான மாயூரநாதர் ஆலயத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழாவில் சவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த திருகோணேஸ்வரர் நடன ஆலயம் குரு மதிவதனி சுதாகரன் மாணவிகள் சிவனின் திருக்கடையூர் திருவிளையாடலான மார்க்கண்டேயர் புராணத்திலிருந்து கால சம்ஹார மூர்த்தி பற்றி நாட்டிய நாடகத்தையும், சீர்காழி ஞானசம்பந்தர் வரலாறு மற்றும் சிதம்பரம் நடராஜர் ரூபத்தின் தத்துவங்களை விளக்கும் நடனம் மெய்சிலிர்க்க வைத்தது. இதேபோல் சென்னை குரு ஷீலா உன்னிகிருஷ்ணனின் ஸ்ரீதேவி ந்ருத்யாலயாவின் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் நிகழ்த்திய மயிலாடுதுறை சுற்றியுள்ள சிவஸ்தலங்களின் வரலாறுகளை தொகுத்து சிவ நவ பக்தி என்னும் நாட்டிய நாடகத்தை தத்துரூபமாக அந்தந்த பாத்திரங்களுக்கு உண்டான உடை அலங்காரத்துடன் சிவனாகவும் நந்தியாகவும் மற்றும் பல கதாபாத்திரங்களை கண்முன்னே காட்சி படுத்தி நாட்டிய நாடக நிகழ்வுகளை சிவனுக்கு சமர்ப்பித்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. முன்னதாக மயிலாடுதுறை மயிலை சப்தஸ்வரங்கள் மாணவிகளின் சப்த தாண்டவம், குரு சந்திரவதனி விஜய் சுந்தரத்தின் திருகோணேஸ்வரர் நடன ஆலயம் மாணவிகளின் நவசக்தி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த தில்லை நடலாலயா, வாலாஜாவை சேர்ந்த லாசியா ஆர்ட்ஸ் பரத கலைஞர்களின் நடனங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்

Exit mobile version