ர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியான மாங்கனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தஸ்லீம். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில் வீட்டில் அவரது மனைவி ஜாஸ்மின்.32. தாய் ஜலிபாபீவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இரு தினங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஜாஸ்மினின் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களது வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் சுதா என்பவரும் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை ஜாஸ்மின் வீட்டிற்கு வந்தபோது கதவுகள் அனைத்தும் பூட்டி இருக்க வீட்டின் அறையில் இருந்த நான்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 60 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது மேலும் மாடியில் உள்ள வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு எதுவும் கிடைக்காத நிலையில் வீட்டின் உள்ளே உள்ள படிக்கட்டு வழி வழியாக ஜாஸ்மின் வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்தது தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் விரைந்து வந்த ஆணைக்காரன் சத்திரம் போலீசார் இடத்தை பார்வையிட்டு திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது
