மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட திட்டை ,தில்லைவிடங்கன், சிவனார் விளாகம், செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் தில்லைவிடங்கன், திட்டை,செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியை மேற்கொண்டனர். இதே போல் ஒரு சில இடங்களில் நடவு பணிகளையும் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நேரடி நெல் விதைப்பு நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி வடிய வழியில்லாமல் அழுகும் நிலையில் உள்ளது. இதை போல் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கி வீணாகி வருகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் கூடுதல் செலவு செய்து விவசாயிகள் ஆயில் இன்ஜின் மூலம் பாசன வயலில் உள்ள மழை நீரை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்த பொழுதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கவலை அடைந்து வருகின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் வேளாண் துறை மற்றும் தனியார் துறையில் விதைகளை வாங்கி நேரடி விதைப்பு செய்தோம் ஆனால் இந்த விதைகள் சரியாக முளைக்காததால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் பாதிக்க பாதிக்கப்பட்டு வந்தோம்
மீதமுள்ள நெற்பயிர்களும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழையால் மழை நீர் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது எனவே அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேதனையோடு தெரிவித்தனர்.

 
			















