10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – குற்றவாளி போலீஸார் கண்களில் இல்லையென தாய் வேதனை !

திருவள்ளூர் மாவட்டத்தில் அரைத்தாண்டு நெஞ்சை உருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளிச்சம் கண்டுள்ளது. பள்ளியில் படித்து வரும் 10 வயது சிறுமி, தனியாக வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத ஒருவரால் கடத்தப்பட்டு, கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை, அரசு பள்ளியில் பயிலும் அந்த சிறுமிக்கு 12 மணிக்கே வகுப்புகள் முடிந்துவிட்டன. வழக்கமாக ரயிலில் வீட்டிற்கு செல்வதன் பதிலாக, அன்று தன் பாட்டி வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தார். அந்த வழியில், தனியாக சென்றபோது, ஒருவர் சிறுமியை கட்டாயமாகத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அரைமணி நேர அதிர்ச்சி!

சிறுமி தப்பிக்க முயன்றும், குற்றவாளி தொடர்ந்து துரத்தி தாக்கி, அரைமணி நேரத்திற்கு மேலாக கொடுமை செய்துள்ளார். சம்பவத்தில் சிறுமி முகம் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாய் கதறல்: “சுட்டுக்கொல்ல வேண்டும்!”

இதுகுறித்து கண்ணீருடன் பேசிய சிறுமியின் தாய், “என் மகளை அடையாளம் தெரியாத ஹிந்தி பேசும் ஒருவன் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். என் பாப்பா, ‘Uncle, Please விட்ருங்க… என்னை அடிக்காதீங்க… என்னை கஷ்டப்படுத்தாதீங்க’ன்னு கத்தினாளாம். ஆனால் அவன் ‘கத்தினா கொலை பண்ணிடுவேன்’னு மிரட்டியிருக்கான். என் பாப்பா முகம் முழுக்க ரத்தம்.. ஆடைகள் ரத்தம்.. இவனை கண்டுபிடிக்கணும், சுட்டுக்கொல்லணும்,” என்று உருக்கமாக கூறினார்.

காவல்துறையின் நடவடிக்கையின்மை?

சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டாலும், குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. இது சிறுமியின் குடும்பத்தில் மேலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இது போன்ற குற்றவாளிகள் விரைவில் பிடிபட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றே பலரும் வலியுறுத்துகின்றனர்.

Exit mobile version