பெங்களூருவில் ஆன்மீக மாநாட்டில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் ஞான ரத யாத்திரை புறப்பாடு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘பாரதீய ஸந்த மஹா பரிஷத் என்ற அமைப்பின் சார்பில் பாரத நாட்டின் பண்பாட்டை (பாரதீய ஸம்ஸ்கிருதி) பாதுகாக்க வேண்டி மாபெரும் ஆன்மீக கருத்தரங்க மாநாடு திங்கள்கிழமையன்று (ஜூன் 16) நடைபெறவுள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்வேறு ஆதீனங்கள், சங்கராச்சாரியர்கள், ஜீயர்கள், சாதுக்கள் 1500-க்கு மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ள இந்த மாநாட்டில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கவுள்ளார். இதற்காக அவர் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் இருந்து, ஸ்ரீசொக்கநாதபெருமானுடன் ஞானரத யாத்திரையாக இன்று புறப்பட்டார். வழியெங்கும் அவருக்கு ஆதீனக்கல்வி நிறுவனங்களில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

Exit mobile version