செஞ்சியில் மேளதாள முழங்க மாட்டு வண்டியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை அரசு பள்ளிகளுக்கு செயல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா மலையரசன் குப்பம், மளவங்தாங்கல், ஆலம்பூண்டி, கெங்கவரம், கணக்கன்குப்பம், அடுக்கம், உள்ளிட்ட கிராமபுறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல் அறக்கட்டளை நிறுவனர் கார்த்திக் பொன்னுசாமி தனது பிறந்தநாளை முன்னிட்டு கல்வி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

அதன்படி மலையரசன் குப்பத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழாவில் கிராம மக்கள் தாம்பூல தட்டு மற்றும் மாட்டு வண்டியில் பள்ளி மாணவர்களுக்கான நோட்புத்தகம், பேனா, பென்சில், மற்றும் விளையாட்டு உபரகரணஙகள் சீர்வரிசையாக கொண்டு வந்தனர்.

மாட்டு வண்டியில் மேளதாளம் முழங்க ஊர் மக்கள் திரண்டு சீர்வரிசை பொருட்களை பள்ளி கொண்டு வந்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் பொருட்களை ஒப்படைத்தனர்.

மேலும் 10 பள்ளிகளில் சுமார் 2 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ10 லட்சம் மதிப்பிலான கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களை செயல் அறக்கட்டளை நிறுவனர் கார்த்திக் பொன்னுசாமி வழங்கினார். மேலும் மாணவ, மாணவியர்களுக்கு அறுசுவை பிரியாணியும் வழங்கப்பட்டது.

மேலும் மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள், ஏழை எளியோருக்கு சேலை, வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

Exit mobile version