கீழடிக்கு அதிக நிதி ஒதுக்கியது யார்…?

அதிமுக ஆட்சியில் கீழடிக்கு ரூ. 105 கோடி ஒதுக்கியதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்த கருத்திற்கு திமுக எம்.எல்.ஏ. எழிலன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. மேலும், கீழடி நாகரிகம் என்பது கி.மு. 3ஆம் நூற்றாண்டு என நம்பப்படுகிறது. இந்த ஆய்வு தொடர்பாக தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணா, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தார்.

ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையைத் திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை, அதில் திருத்தங்களையும் கேட்டுள்ளது. இதன் காரணமாக தமிழர்களின் தொன்மையை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் மத்திய அரசுக்கு தங்களது அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவு செய்தன.

இதில், பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக கீழடிக்கு குரல் கொடுக்கவில்லை என்றும், அக்கட்சியின் பொதுச் செயலாளரை விமர்சித்தும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கேலிச்சித்திரத்தை வெளியிட்டது. இதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், ஆர்பி உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version