கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளில் இருந்து உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு முறையாக கற்கள் போன்ற கனிம பொருட்கள் வழங்க வில்லை என டெம்போ ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு

கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த குவாரிகளில் இருந்து உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஏற்கனவே உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு 80 சதவீதமும் டாரஸ் லாரிகளுக்கு 20 சதவீதம் என முன்னுரிமை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு 20 சதவீதமும் டாரஸ் லாரிகளுக்கு 80 சதவீதம் என முன்னுரிமை வழங்க படுவதால் கிலோ மீட்டர் தொலைவில் நேற்று மாலை முதல் நூற்றுக்கணக்கான டெம்போ போன்ற வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

தொடர்ந்து உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு கனிமங்கள் கிடைக்காததால் ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளனர்.
எனவே முறையாக கனிமங்கள் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version