பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மழைநீர் புகுந்ததால் அகற்றும் பணி

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் இன்னும் சற்று நேரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உரையாற்ற உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநாட்டு பந்தலுக்கு சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே வாகனங்களில் இருந்து இறக்கி விடப்பட்டு உற்சாக கோஷம் எழுப்பியபடி பந்தலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் வானம் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் உற்சாக கோஷங்களுடன் நடந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலை ஓரங்களில் உள்ள மரங்களின் கீழேயும் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். மாநாட்டில் திறந்த வெளியிலும் இருக்கைகள் போடப்பட்டு பெண்கள் தொண்டர்கள் அமர்ந்திருந்த நிலையில் பலத்த மழை காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கினர். இன்னும் சிறிது நேரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உரையாற்ற உள்ள நிலையில் மேடையின் அருகே மழைநீர் புகுந்ததால் அதை அதற்ச்சும் வகையில் வன்னியர் சங்க தோழர்கள் அதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version