விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது
பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
மத்திய அரசு கடந்த 2011 மற்றும் 2019 தேர்தல்களில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றியுள்ளது. அதேசமயம், திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் 50% கூட நிறைவேற்றப்படவில்லை. ஆபரேஷன் செந்தூர் மிகவும் தைரியமான நடவடிக்கை. இதில் 75% தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செயலை இதற்கு முன்பு எந்த அரசு மேற்கொண்டதில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசு உலகளவில் நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியாவை உயர்த்தியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னேற்றம், கல்வியில் தன்னிறைவு ஆகியவை மத்திய அரசின் சாதனைகளாகும்.
காங்கிரஸ் ஆட்சியில் அதல பாதாளத்தில் இருந்த பொருளாதாரம் பாஜக ஆட்சியில் மேலே கொண்டு வரப்பட்டது. பாஜக அரசு அனைத்து அமைச்சர்களின் ஒருமைப்பாட்டால் இந்த வெற்றி சாத்தியமானது.
தமிழகத்தில் எயிம்ஸ் திட்டம் செயல்படாததற்கு தமிழக அரசின் இடஒதுக்கும் மற்றும் அலட்சியமே காரணம். மத்திய அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. திமுக அரசு மத்திய அரசை குற்றம் சாட்டுவது, ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியாத பயத்தின் வெளிப்பாடாகும்” என்றார்.
அதிமுக–பாஜக கூட்டணி குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அவர் கூறுகையில், “அது மாநில தலைவர் அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்தாகும். நைனார் நாகேந்திரன் எடுக்கின்ற முடிவுக்கு நான் கட்டுப்பட்டு செயல்படுவேன்” என்றார்.
முருகர் பக்தர் மாநாடு குறித்த பத்திரிகையாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், முருகர் பக்தர் மாநாட்டு பரிசுரங்களை இந்து கோவில்களில் உள்ளே சென்று வழங்க அனுமதி மறுப்பு குறித்து கூறுகையில்,
“நான் கிறிஸ்தவன் என மார்தட்டிக் கொள்ளும் துணை முதலமைச்சர் உதயநிதி மற்ற மதங்களை உயர்வாக மதித்து, இந்து மதத்தையே இழிவுபடுத்த முனைகிரார். மற்ற எந்த மதத்தையும் இழிவுபடுத்த மாட்டார். இதுவே அவர்களின் மனநிலையை காட்டுகிறது. இவர்களை துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிகளில் வைத்திருப்பதால், முருகர் பக்தர் மாநாடு நடத்த பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் எங்களது பரிவார் அமைப்புகளின் துணையுடன் முருகர் பக்தர் மாநாடு எதிர்வரும் 22 ஆம் தேதி மதுரையில் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறும்,” என தெரிவித்தார்.