குரூப் 2, 2Aதேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு மையம்

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மணிமண்டபத்தில் அமைந்துள்ள நூலகத்தில்
விரைவில்
குரூப் 2, 2 ஏ தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு மையம் தொடங்கப்படும்
வன்னியர் பொது சொத்து நல வாரிய அறக்கட்டளை சேர்மன் ஜெயராமன் ஐ.ஏ. எஸ். – விக்கிரவாண்டி எம்.எல். ஏ அன்னியூர் சிவா தகவல்

*விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழுதரெட்டி என்ற பகுதியில் கடந்த 28.1. 2025 அன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.அவர்களால்
மறைந்த முன்னாள் வேளாண்துறை அமைச்சர் கோவிந்தா சாமிக்கு நினைவரங்கமும், 21 சமூக நீதி போராளிகளுக்கு மணி மண்டபம் மற்றும் நூலகமும் ரூபாய் 5 கோடி 50 லட்சம் செலவில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது
இதனை இன்று வன்னியர் பொது சொத்து நலவாரிய தலைவரும் முன்னாள் ஆட்சியருமான .ஜெயராமன், வன்னியர் நல வாரிய உறுப்பினரும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான அன்னியூர் சிவா ஆகியோர் மணிமண்டபம், நினைவரங்கம், மற்றும் நூலகங்களை ஆய்வு செய்தனர்..
அந்த நூலகத்தில் யுபிஎஸ்சி, டி என் பி எஸ் சி , உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கான நூல்களை கண்டு வாரியத் தலைவர் ஜெயராமன் வியந்தார். அங்கு உள்ள
ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள நூல்களை விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவாவால் வழங்கப்பட்டது என்பதை அறிந்த அவர் எம் எல் ஏ வை பாராட்டினார் .
அதனைத் தொடர்ந்து

செய்தியாளருக்கு
வன்னியர் பொது சொத்து நலவாரிய தலைவர் ஜெயராமன் பேட்டி அளித்தார் அப்பொழுது அவர் தெரிவிக்கையில்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன ஆனால் இதுபோல் தேசிய நெடுஞ்சாலையில் இது போல மணிமண்டபத்தில் நூலகம் அமையப்படவில்லை.இங்கு அமைந்துள்ள நூலகம் மிக சிறப்பாக உள்ளது.
இந்த மணிமண்டபத்தில் உள்ள நூலகத்தில் மிக விரைவில்
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால்
நடத்தப்படும் குரூப் 2 குரூப் 2ஏ போன்ற தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு சென்னையில் உள்ள பிரபல ஐஏஎஸ் அகாடமி மூலம் விரைவில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதற்கான கட்டமைப்புகள் இந்த நூலகத்தில் அமைந்துள்ளன மேலும் சில கட்டமைப்புகள் தேவை உள்ளதால் இன்னும் 15 நாட்களில் .
போட்டி தேர்வுகளுக்கான மையம் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்

Exit mobile version