காதலியின் வீட்டில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதலியின் வீட்டில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் இருப்பதாகவும் பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படியான செய்தியாக இல்லை என குற்றச்சாட்டை முன் வைத்த நிலையில்.

சம்பவம் குறித்து குமரி எஸ் பி ஸ்டாலின் விளக்கம்.

முதற்கட்டமாக சந்தேக மரணம் 194 என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையில் இருந்து வருவதாகவும் இளைஞரின் லேப்டாப் மற்றும் மொபைல் போன் சைபர் கிரைம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வீட்டின் மேலே இளைஞர் ஏறியதற்கான சுண்ணாம்பு தடமிருப்பதாகவும்

இளைஞரை அடித்தது மாதிரியான தடங்கள் எதுவும் இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் மேலும் பிரேத பரிசோதனை முடிவடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையில் இருப்பதால் வழக்கு குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version