மயிலாடுதுறை நகராட்சி நகர் மன்றத்தில் மாதாந்திர கூட்டத்தில் கேள்வி எழுப்பிய கவுன்சிலரிடம் எப்ப வந்த கவுன்சிலர் நீங்க மக்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியதால் கவுன்சிலர் கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு:-
மயிலாடுதுறை நகராட்சி நகர் மன்றத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார் முன்னிலையில் நகரின் 36 வார்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளின் தேவைகளையும், செய்யப்படாத பணிகளையும் விவாதித்தனர். இதில் 29வது வார்டு திமுக கவுன்சிலர் ரஜினி பேசுகையில் தனது வார்டுக்கு சாலை உள்ளிட்ட எந்த வசதியும் சரியாக செய்து தரப்படவில்லை என்றும், பாதாள சாக்கடை புதிதாக அமைப்பது பிரச்சனையாக உள்ளதாகவும் குற்றம் சாட்டி பேசியபோது பாதாள சாக்கடை பிரச்சனையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நகர்மன்ற தலைவர் கூறியபோது தனது வார்டு பிரச்சனையை நான் தான் பார்க்க வேண்டும் நீங்கள் எப்படி பார்ப்பீர்கள் என்று ரஜினி கேள்வி எழுப்பிய போது அதற்கு நகர் மன்ற தலைவர் செல்வராஜ் எப்ப நீங்க கவுன்சிலர் ஆனீங்க நான் பார்த்துக்கிறேன் என்று கூறியதால் கடும் வாக்குவாதத்தில் ரஜினி ஈடுபட்டார். புதிதாக வந்தால் பேசக்கூடாதா எப்படி கூறினீர்கள் என்று வாக்குவாதம் முற்றவே உங்கள் கேள்வி நேரம் முடிந்து விட்டது அமருங்கள் என்று நகர மன்ற தலைவர் கூறினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.













