திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.19.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்த புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மையத்தின் சேவைகளை தொடங்கி வைத்தார்.

இம்மையத்தில் ஆக்குபேஷன் தெரபி, உளவியல் ஆலோசனை, பிசியோதெரபி, பார்வை குறைபாடுகள் கண்டறிதல், சிறப்புக் கல்வி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குத் தேவையான பல்வேறு உதவி உபகரணங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக குழந்தைகள், முழுமையான சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகளை எளிதில் பெற முடியும் என்பதால், இது அவர்களுக்கு பெரும் பயனளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். மாவட்டம் மாற்றுத்திறனாளி அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அலுவலர் சிவகுமார் திருப்பத்தூர் மருத்துவமனை டாக்டர். பிரபாகரன் மற்றும் ஊற்று பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Exit mobile version