March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“நீதிமன்ற உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாதது” – திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் எச்சரிக்கை!

by sowmiarajan
December 18, 2025
in News
A A
0
“நீதிமன்ற உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாதது” – திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் எச்சரிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சட்டம்-ஒழுங்கு காரணங்களைக் கூறி முடக்குவது, அரசியலமைப்பு இயந்திரத்தைச் சீர்குலையச் செய்யும் செயல் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் ஏ.டி.ஜி.பி ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிகுமார் தொடர்ந்த வழக்கில், “டிசம்பர் 3-ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்” என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தும், தீபம் ஏற்றும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது குறித்துத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மனுதாரரை மலையேற விடாமல் தடுத்தது மற்றும் சி.ஐ.எஸ்.எப். வீரர்களைப் போலீசார் தடுத்தது தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த அவமதிப்பு வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், அரசுத் தரப்பு செயல்பாடுகள் குறித்துத் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார். “சட்டம் – ஒழுங்கு நிலைமையைக் காரணம் காட்டி, நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது முற்றிலும் ஏற்புடையதல்ல. இது மன்னிக்க முடியாத செயலாகும். இத்தகைய போக்கு சட்டம் – ஒழுங்கு மேலும் சீர்குலையவே வழிவகுக்கும். இது இறுதியில் அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்குவதற்கு இட்டுச் செல்லும்” என எச்சரித்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத் தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர். மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். அப்போது தலைமைச் செயலர் தரப்பில், “நீதிமன்ற உத்தரவிற்கு அரசு முழு மரியாதை அளிக்கிறது. உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்ற உள்நோக்கம் அரசுக்கு எதுவும் இல்லை. ஆனால், அப்பகுதியில் நிலவிய சட்டம் – ஒழுங்கு பிரச்னை மற்றும் அசாதாரண சூழல் காரணமாகவே மேல்முறையீடு செய்யப்பட்டது. இது குறித்து விரிவான விளக்கங்களை அளிக்க எங்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவை” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற உத்தரவு தெரிந்தே மீறப்பட்டுள்ளதாக வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் விளக்கங்களைப் பரிசீலிப்பதற்காக வழக்கைத் தள்ளிவைத்தார். நீதிமன்ற உத்தரவைச் சட்டம் – ஒழுங்கு பெயரில் அரசு கிடப்பில் போட்டதாக நீதிபதி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருப்பது, தமிழக அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: court order violationHigh Court warningJustice G R Swaminathantamil nadu governmentThiruparankundram case
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“சமரசம் செய்யத் தயார் உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பு அதிரடி!

Next Post

அமைச்சர் பெரியசாமி மீதான அமலாக்கத் துறை விசாரணை: பதிலளிக்க உயர்நீதிமன்றம் கெடு!

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்
News

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
News

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்
News

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026
Next Post
அமைச்சர் பெரியசாமி மீதான அமலாக்கத் துறை விசாரணை: பதிலளிக்க உயர்நீதிமன்றம் கெடு!

அமைச்சர் பெரியசாமி மீதான அமலாக்கத் துறை விசாரணை: பதிலளிக்க உயர்நீதிமன்றம் கெடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

November 26, 2025
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

November 15, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.