சின்னசேலம் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் வந்த மக்களுக்கு பணம் பட்டு வாடா செய்யும் வீடியோ வைரல் !
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பெருமங்கலம் கிராமத்தில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம் முடிந்த பின்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.
இந்த பணப்பட்டு வாடாவை ஊராட்சி மன்ற தலைவர் வேலு செய்தார். அப்போது ஒரு மூதாட்டி எனக்கெல்லாம் காசு கொடுக்கலைன்னா உங்களுக்கு ஓட்டு போட மாட்டேன் என கூறியுள்ளார் :
இந்நிலையில் டோக்கனை கையில் வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் முந்தியடித்து கொண்டு பணத்தை பெற முயற்சித்ததை பார்த்து ஒரு கட்டத்திற்கு மேல் ஊராட்சி மன்ற தலைவர் ஆளை விட்டால் போதுமடா சாமி என அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
மேலும் திமுக பொதுக்கூட்டத்தில் டோக்கன் கொடுத்து பண பட்டுவாடா செய்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது…















