திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய அங்கமான மாநில வன்னியர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று துவங்கி நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வன்னியர் சங்க நிர்வாகிகள் வருகை தந்தது உள்ளனர். குறிப்பாக கட்சியினுடைய கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பூத்தா அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், புதுவை மாநில அமைப்பாளர் கணபதி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; 1980ல் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம், வன்னியர்களுக்காக செயல்பட்டு வருகிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால் கடுமையான போராட்டத்தை நடத்துவோம் என்றார்.