வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

துரை வைகோவால் அவரது தந்தை வைகோவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக முன்னாள் மதிமுக மாவட்ட செயலாளரும் , தற்போதைய அதிமுக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளருமான மார்க்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி :-

திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு சீர்காழி தொகுதியில் தீப்பெட்டி தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தற்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் இ. மார்கோனி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாவட்டச் செயலாளராகப் பயணித்தவன். 30 ஆண்டுகாலம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவன்.

தற்பொழுது எடப்பாடியார் அவர்களின் செயல்பாடும், அவர்கள் இந்த மாவட்டத்தைப் பிரித்துக் கொடுத்ததின் பேரிலும், மற்றும் இந்த மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவித்த பல திட்டங்களின் அடிப்படையில் நான் அவரோடு பயணிக்க வேண்டும் என்று வந்தவன்.

மேலும் தமிழகத்தில் நான்கு தொகுதிகளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது. அதில் மூன்று தொகுதி ‘உதயசூரியன்’ சின்னம் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் உதயசூரியன் சின்னத்துல நிற்க வேண்டும் என்று வலுக்கட்டாயமா நிற்க வேண்டும் என கூறியதாகவும் , ஆனால் துரை வைகோ பிடிவாதமாக “நான் செத்தாலும் தனிச் சின்னத்தில்தான் நிற்பேன்” என்று எழுந்து கண்கலங்கி நேருக்கு நேராக ஒரு நாடகத்தை நடத்தி, தீப்பெட்டி சின்னத்தில் திருச்சியில் வெற்றி பெற்றார்.

அதேபோல இந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், தீப்பெட்டி சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று பிடிவாதமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் சீர்காழிக்கு தீப்பெட்டி சின்னத்தைக் கட்டாயமாக எனக்குத் தர வேண்டும் என்று பெற்று இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறார்.

கடந்த மூன்று நாட்களாக கள நிலவரம்த்தின் படி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இங்கே நகரச் செயலாளர் இல்லை, ஒன்றியச் செயலாளர் இல்லை, கிளைக் கழகச் செயலாளர் இல்லை, 24 வார்டுகளிலும் செயலாளர்கள் இல்லை. மொத்தத்தில் கட்சியில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு நான் வரும்பொழுது அனைவரும் என்னோடு வந்துவிட்டார்கள். ஒருவர் கூட இல்லை.

தொல்வி பயத்தில் துரை வைகோ, தற்பொழுது இந்த நிமிடம் தமிழ் இந்திய வரலாற்றிலேயே ஒரு கட்சி சின்னத்தை அறிவித்துவிட்டு பயத்தின் காரணமாக “நான் என்னோட சின்னத்தில் நிற்க முடியாது” என்று மாற்றுச் சின்னத்தில் – அதாவது உதயசூரியன் சின்னத்திலேயே – நிற்பதாகத் தற்பொழுது அறிவித்திருக்கிறார்கள்.

சீர்காழிக்கு வந்த சின்னம் தீப்பெட்டி. வைகோ இன்றைக்கு பயத்தில் இருக்கிறார். இந்த நான்கு தொகுதிகளையும் – மூன்று தொகுதிகளையும் – ஏற்கனவே அடமானம் வைத்துவிட்டார். இப்பொழுது நான்கையுமே சூரியனில் அடமானம் வைத்துவிட்டு தமிழகம் முழுவதும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களை மிக மோசமான, கேவலமான கேலி கூத்தாகப் பேசக்கூடிய நிலைக்கு வைகோவால் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கும்போது, வரக்கூடிய பதவியை உங்கள் மகனுக்குப் பெற்று கொடுத்தீர்கள். ஒரு வாரிசு அரசியலை உருவாக்கக்கூடாது என்று நீங்கள் வாரிசை எதிர்த்து ஆரம்பித்துவிட்டு தற்பொழுது வாரிசிடமே கொண்டு போய் அடமானம் வைத்துவிட்டீர்கள்.

எங்களைப் போன்ற தொண்டர்கள் நாங்கள் அதிமுக-வில் பயணித்திருந்தாலும் சரி, திமுக-வில் பயணித்திருந்தாலும் சரி, இந்த 30 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள மறுமலர்ச்சி திமுக தொண்டர்கள் அனைவரும் தனி செல்வாக்கு உள்ளவன், உழைக்கக்கூடியவன், எந்த இடத்திலும் தன்மானத்துடன் இருக்கக்கூடியவன் .

இன்னைக்கு அதிமுக-க்கு துரோகம் பண்ணிட்டு இன்னைக்கு செங்கோட்டையன் போனார்னா, செங்கோட்டையனுக்கு ஒன்பது முறை பதவி கொடுத்தது அதிமுக, மந்திரி பதவி கொடுத்தது அதிமுக. செங்கோட்டையன் போகும்போது “துரோகி” என்று அதிமுக-வால் சொல்ல முடியும். ஆனால் மறுமலர்ச்சி திமுக-வில் அப்படி இல்லை. ஒரு ஒரு தொண்டனும் சொத்தை வித்து கட்சிக்கு கொடுத்தவன்தான் மதிமுக-வில் இருந்தான்.

தொடர்ந்து முன்று நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பயணித்த அனைத்து மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்களும் எனக்குத் தொடர்ந்து என்னை தொடர்பு கொண்டு வருகின்றார்கள்.

துணைப் பொதுச் செயலாளர்கள் எல்லாம் ரிசைன் பண்ணிட்டாங்க. இதைவிட நாளை ஒரு நிகழ்வு நடக்கப் போகிறது

இன்றைக்கு அவர்கள் அனைவரும் என்னிடம் பேசியது மார்கோனி நீ போகும்போதே நாங்க எல்லாம் வந்திருக்கணும். இன்னைக்கு இந்த துரை வைகோ இவ்வளவு பெரிய கிரிமினலாகவும் ஒரு கார்ப்பரேட் ரவுடியாகவும் இருக்கிறதை நாங்கள்பார்க்கிறோம். எங்களை எல்லாம் அடிக்க வர்றான், நாங்க பேசும்போது நடக்குறதே வேறங்கறான். மிக மோசமான முறையில் எங்களை நடத்துறான், கேவலமா நடத்துறான்”என புலம்பியதாக தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் மூன்று மாதங்களுக்கு முன்பு தலைவர் வைகோவை அறையில் விட்டு துரை வைகோ அடித்து இருப்பதாகவும். அவர் கை முறிந்து அவர் கழிவறையில் கீழே விழுந்த செய்தி எல்லாம் வந்தது , அதுமட்டுமில்லாமல் இரண்டு தினங்களுக்கு முன்பு தென் சென்னை மாவட்டச் செயலாளர் கழகக் குமார் அவரோட பதவியை ராஜினாமா செய்திருக்கிறார், இதற்குக் காரணம் எதார்த்தமா தலைவரைப் பார்க்க வீட்டுக்குள்ள போகும்போது ஒரு சத்தம் கேட்டுருக்கு. மிகக் கேவலமான வார்த்தைகளால், தமிழில் சொல்ல முடியாத வார்த்தைகளால் அவரைத் திட்டி அடிக்கப் போகும்போது இவர் போயிருக்கார். போனவுடனே இவரை அவர் கேட்க… “நான் எங்க அப்பனைப் பேசுறேன்”னு சொல்ல, “உனக்கு அப்பனா இருக்கலாம், அவர் எனக்குத் தலைவர்”னு பேச ரெண்டு பேரும் சட்டையைப் பிடிச்சு நிக்கிற நிலைமைக்குப் போய் இன்னைக்கு அவர் ராஜினாமா பண்ணிட்டாரு.

மேலும் மத்திய புலனாய்வுத் துறைக்கும் தமிழ்நாடு டிஜிபி-க்கும் நான் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தலைவர் வைகோ அவரோட உயிருக்கு ஆபத்து இருக்கு. நான் 30 வருஷம் பயணிச்சுட்டேன். வைகோவோட தம்பி ரவிச்சந்திரன் குடும்பத்தையே நடுத்தெருவுல விட்டாங்க.
துரை வைகோ அவர்களே, மதிமுக-ல மாவட்டச் செயலாளராதான் இருந்தேன். தீப்பெட்டி சின்னத்தை வாங்கிட்டு இங்க வா, உன்னை நான் ஜெயிச்சுக் காட்டுறேன் என சவால்

Exit mobile version