“என்னை இரண்டு பேய்கள் அழைக்கின்றன” – குடும்பத்தினர் அதிர்ச்சி

நாகர்கோவில்: குமரி மாவட்டம் இரணியல் அருகேயுள்ள குருந்தன்கோடு காடேற்றி பகுதியை சேர்ந்த இசக்கி முத்துகுமார் (வயது 33) என்பவர், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். வெல்டிங் வேலை செய்து வந்த அவர், திருமணமாகாதவராவார்.

இந்நிலையில், இன்று முன்தினம் காலை நேரமாகியும் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை பலமுறையாக தட்டியும் பதில் இல்லை. பின்னர் கதவை உடைத்துக் கொண்டு சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உடனே இரணியல் போலீசாருக்கு தகவளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

அத்துடன், அவருடைய அறையில் நடத்தப்பட்ட சோதனையில், தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில்,

“என்னை இரண்டு பேய்கள் அழைக்கின்றன… அதனுடன் செல்கிறேன்” என்று உருக்கமாக எழுதியிருந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், இசக்கி முத்துகுமார் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது. தற்போது, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துயரச்சம்பவம், ஊராளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version