குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை முன்னிட்டு, இந்தியா கூட்டணியின் வேட்பாளர் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய துணைத் தலைவரைத் தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. போட்டி நிலவின் நிலையில், வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் யார் போட்டியிடப்போகிறார்கள் என்ற விவகாரம் குறித்த ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இன்று டெல்லியில், நாடாளுமன்ற வளாகத்தில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருச்சி சிவா இந்தியா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானன. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்கள் அவரிடம் இந்தக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அது எனக்கு தெரியாது. தலைவர்கள் முடிவு செய்வார்கள்” என பதிலளித்தார்.