- தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என, கமல் கூறியது, மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக, தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு வேட்டு வைத்து விடுமோ என, தி.மு.க.,வினரிடம் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
- பலரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், வெற்றிக்காக ரோடு ஷோ நடத்துவதில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
- கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பொதுமக்கள் கூட்டமாகக் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ், தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா’ என்று தமிழக பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
- தேர்வு செய்யப்பட்ட ஒரு சில முதலாளிகளுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து இந்தியர்களுக்கும் வேலை செய்யும் பொருளாதாரமே தேவை என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
- 20 மாதங்களுக்கு பின் பிணைக்கைதிகள் 2 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. ‘அனைத்து பிணைக்கைதிகளையும் மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது’ என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
- செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு விஜய்க்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பதில் இனிமேல்தான் வரும் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.
- கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதாவின் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது.
- பஹல்காம் தாக்குதலுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
- பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா செய்வாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.