- உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வங்கிகளில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான புதிய வரைவு கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மத்திய நிதியமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை.
- அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
- பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஐந்தே மாதத்தில் நீதி வழங்கப்பட்டுள்ளது. சட்ட நீதியையும் பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம் என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், யார் சார்..? என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது. யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
- மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை கட்சித் தலைமை நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக நிர்வாகி ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியரையும் மிகவும் காயப்படுத்தியுள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் உலக அரங்கை எட்ட வேண்டும் என ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடும் போது தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி.சுப்ரியா சுலே கூறினார்.
- லஞ்ச வழக்குகளில் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு உரிய ஆவணங்கள் வழங்குவதில் ஒத்துழைப்பு இல்லாததால், தொடா்புடைய அரசு ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.
- டிரம்ப், தனது 2024 தேர்தல் பிரசாரம் செய்த போது கனடா அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் அதை கனடா நாட்டு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. டிரம்ப் கருத்து தொடர்பாக கனடா அரசு தரப்பிலும் கடும் கண்டனமும் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டது.