- சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் எத்தனை ‘சீட்’டுகளை பெறுவது என்பது குறித்து, மா.கம்யூ., – வி.சி.க., போன்ற கட்சிகளைப்போல், பொதுக்குழுவில் ம.தி.மு.க., தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கும்.
- அரசின் கொள்கை முடிவு அடிப்படையிலான திட்டங்கள் மக்கள் நலனிற்குரியதாக இருக்க வேண்டும். கரூர் மாவட்டம் குளித்தலை பஸ் ஸ்டாண்டில் நுழைவுவாயில் வளைவு அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளை அணுகலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
- சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறை சமையலர்கள் 80 பேரின் பணி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- வீடு, விவசாயத்துக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்காக, 2024 – 25ல், 15,785 கோடி ரூபாயை, மின் கட்டண மானியமாக மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கி உள்ளது.
- தொழிற்சாலைகள் அதிகரித்து வரும் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 150 கோடி ரூபாயில், 3,000 படுக்கைகளுடன் கூடிய தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்ட, அரசு முடிவு செய்துள்ளது.
- தாலுகா அலுவலகங்களில், தொகுப்பூதியத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிவோர், தங்களுக்கு ஓராண்டாக வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்குவதோடு, தொடர்ந்து பணி வழங்க வேண்டும்’ என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தகுதி தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில்’டாப் 100′ தகுதி பட்டியலில் தமிழக மாணவர்கள் ஆறு பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் திருநெல்வேலி மாணவர் சூரியநாராயணன் தேசிய அளவில் 27வது இடத்தையும் மாநில அளவில் முதலிடமும் பெற்று அசத்தியுள்ளார்.
- நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் அ.தி.மு.க., கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக அரசு பயந்து வருவதையே காட்டுகிறது என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
- இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழு, சர்வ தேச விண்வெளி நிலையத்திற்கு வரும், 19ம் தேதி புறப்பட்டு செல்லும் என இஸ்ரோ அறிவித்து உள்ளது.
- ஜம்மு – காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதி யாகவும், வடகிழக்கு மாநிலங்களை நேபாளத்தின் ஒரு பகுதியாகவும் வரைபடம் வெளியிட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, இஸ்ரேல் அரசு மன்னிப்பு கோரியுள்ளது.