- தமிழகத்தில், 200 கோடி ரூபாய்க்கு மேல் திட்டச்செலவு உடைய துணைமின் நிலையங்களை, தனியார் நிறுவனங்களும் அமைத்து பராமரிக்கும் வகையில் ஒப்புதல் அளிக்க, புதிதாக ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் யுடிலிட்டி எனப்படும் மாநில மின் தொடரமைப்பு நிறுவனத்தை துவக்க அரசு முடிவு செய்துள்ளது.
- அதிகாரம் இருக்கும் முதல்வர் தன்னிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார். நமது எதிரி தி.மு.க., தான் என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
- தி.மு.க., கூட்டணியில் வருத்தம், சங்கடம் இருந்தாலும் அதில் தொடருவோம் என்று ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை வைகோ கூறி உள்ளார்.
- இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
- தி.மு.க.,வினர் பொது வெளியில் ஆபாசமாக பேசுவதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, இப்படி கேலிச்சித்திரம் அவதூறு கருத்துக்களை வெளியிடுவது வாடிக்கையாகிக் கொண்டே இருக்கிறது. 2026ல் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்” என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,பதில் அளித்தார்.
- எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள் தான் தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள் என்று மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
- இஸ்ரேல் உடனான போரில் தான் கொல்லப்பட்டால், தலைமைப்பொறுப்புக்கு யார் வரவேண்டும் என்று 3 பேரை ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பொறுப்பின்றி செயல்பட்ட அதிகாரிகள் மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது.
- திருவிளையாடல் படத்தில் வரும் தருமியைப்போல், ‘எனக்கில்லை நோபல் பரிசு’ என்று புலம்பிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அவரது பெயரை பரிந்துரை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் 22-06-2025
