- கடவுள் ஜெகநாதரின் மண்ணுக்கு வர வேண்டும் என்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழைப்பை நிராகரித்தேன்,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
- பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவரின் கையெழுத்தோ, அனுமதியோ பெண்கள் பெற தேவையில்லை என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
- முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம் என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
- டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- புதியதாக வாங்கப்படும் அனைத்து வகை இருசக்கர வாகனங்களுடன் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜனவரி மாதம் முதல் இதுவரை 213 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர்.
- ஏழைகள் கேள்வி கேட்பதையும், முன்னேறுவதையும், சமமாக நிற்பதையும் பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை, என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
- இந்திய மாணவர்கள் 1000 பேர் வெளியேறுவதற்காக சிறப்பு நிகழ்வாக வான் வெளியை ஈரான் அரசு திறந்துள்ளது.
- பாகிஸ்தானின் நூர் கான் மற்றும் ஷோர்கோட் விமானப்படை தளம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே, போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, என பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் கூறியுள்ளார்.