- அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ள 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளிலும் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணிக் கட்சிக்கு ஒரு உறுப்பினா் பதவி ஒதுக்கப்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
- பொறுமைக் கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம் என்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
- நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ. 500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
- கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரிலான செயலியில் முதலீடு செய்து ரூ.2 கோடி ஏமாந்திருப்பதாக சைபர் பிரிவில் புகார்.
- ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ சார்பில் அழைப்பு.
- போக்குவரத்து துறையில் சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு – 2025 உலக சுற்றுச்சூழல்சிறப்பு விருது.
- பல்கலை வகுப்புக்கு செல்லாமல் இருந்தாலோ, பாதியில் படிப்பை நிறுத்தினாலோ விசா ரத்து செய்யப்படும் என்று இந்திய மாணவர்களை அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
- தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் 3 மாநில அரசுகள் அரசியல் செய்வதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியுள்ளார்.
- தி.மு.க., ஆட்சியைக் குறை சொல்ல ஏதுமில்லாததால், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.
- ”இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது,” என பிரதமர் மோடி தெரிவித்தார்.